செஸ் ஒலிம்பியாட் – 5வது சுற்று : தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி..!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று நடைபெற்ற 5வது ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி ‘பி’ பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா – ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவை எதிர்த்து விளையாடினார்.

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 86வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவிடம் தோல்வி அடைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.