ஸ்டாலினை விடுவிக்கக் கோரி கோட்டைக்கு திரளும் கூட்டம்! (காணொளி)

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாற்று சித்தாந்தங்கள் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோருகின்றனர்.


Leave A Reply

Your email address will not be published.