நாயைக் கொடூரமாகக் கொலைசெய்த இளைஞர்கள்! – இருவர் கைது.

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றைக் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனைக் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு, 09ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றால் துண்டித்து, நாயின் முகத்தை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்துப் படுகொலை செய்துள்ளனர்.

தமது கொடூரமான செயலைக் காணொளியாகப் பதிவு செய்து அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவத்தைக் காணொளி எடுத்தவர், அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் எனவும், அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.