பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கு சென்ற மேலும் 07 பேர் காணாமல் போயுள்ளனர்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணியில் இருந்த மேலும் 07 பேர் காணாமல் போயுள்ளதாக பிரான்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

09 விளையாட்டு வீரர்களும் ஒரு பயிற்றுவிப்பாளரும் இதில் உள்ளனர்.

பிரித்தானியாவில் தங்கி வாழ வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜூடோ வீராங்கனை சமிலா தில்ஹானி – அவரது பயிற்சியாளர் அசேல டி சில்வா மற்றும் மல்யுத்த வீரர் ஷனித் சதுரங்க ஆகியோர் கடந்த வாரம் காணாமல் போயுள்ளனர், மேலும் 07 பேர் தற்போது காணாமல் போயுள்ளனர்.

எனினும், அவர்களில் மூவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. விசா நிபந்தனைகளை மீறாததால், அவர்களது கடவுச்சீட்டை மீள ஒப்படைக்குமாறு அந்நாட்டு பொலிசார் அவர்களிடம் கூறியதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிரான்ஸ் செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.