யானை தாக்கி பெண் சாவு!

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கெக்கிராவ – ஹொரபொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

57 வயதுடைய குறித்த பெண் தனது வீட்டுக்கு அருகிலுள்ள தனது மகனின் வீட்டுக்குச் சென்றிருந்தபோதே இவ்வாறு காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இந்தக் காட்டு யானை, கலாவெவ தேசிய பூங்காவில் இருந்து கிராமத்துக்கு வந்துள்ளது எனக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.