ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பலம் வாய்ந்த இருவர் இலங்கை வரவுள்ளனர்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த அமைப்பின் பலமான உறுப்பினர்கள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் ஆசிய பசிபிக் தலைவர் ரோரி முங்கோவன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் (UNDCO) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குனர் டேவிட் வில்லியம் மெக்லாக்லன்-கார்.

ரோரி முங்கோவன் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கை வரவுள்ளார்.

David William McLachlan-Carr – செவ்வாய்க்கிழமை (16) முதல் இலங்கைக்கு விஜயம் செய்து சனிக்கிழமை (20) வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோரை ஐ.நா அதிகாரி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.