வாழைச்சேனையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞர் கைது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கியுடன் 27 வயது இளைஞர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து ஓமனியாமடு பிரதேசத்தில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது அப்பகுதி காடொன்றில் இருந்து வீட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்த இளைஞரைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துக் கைதுசெய்ததுடன் துப்பாக்கியையும் கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.