கல்வி சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் நேரில் ஆராய்வு.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்துக்குரிய கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய கலந்துரையாடல் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியிலும் இடம்பெற்றது.

கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் வகையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.