இலங்கைக்கு எப்போதும் உதவுவோம்! – இந்தியா உறுதி.

“இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றது.”

இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இவ்வருடம் மட்டும் இந்தியா 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

தாய்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ‘இந்தோ – பசிபிக் பற்றிய இந்தியாவின் பார்வை’ என்ற தலைப்பில் நேற்று விரிவுரை ஆற்றிய பின்னர் தொடர்ச்சியான கேள்விகளுக்குச் ஜெய்சங்கர் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.