ரணிலை ஜனாதிபதியாக்கியது நாங்கள்….. எங்களுக்கு தேவையான விதத்தில் ரணில் நடந்து கொள்ள வேண்டும் – சனத் நிஷாந்த

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தது தமது கட்சியெனவும் எனவே அவர் தமது கட்சியின் தேவைக்கேற்ப செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிபந்தனையின்றி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாகவும், அது தமக்கு பெருமை அளிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற பலய நிகழ்ச்சியின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இன்றும் அதிகாரம் இருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த , நாளை மீண்டும் தேர்தல் ஒன்றை நடத்தினால் தங்களது அதிகாரத்தை காட்ட தயாராக இருப்பதாக தெரவித்தார்.

2 Comments
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    தேர்தல் தான் சிறந்தது நடத்தவும்

  2. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    உங்களுக்கும் பா பா உன் அப்பனுக்கும் பா பா அனைவருக்கும் பாபா இது தான் எமது சட்டம்

Leave A Reply

Your email address will not be published.