ஆணின் சடலம் மீட்பு!

கெஸ்பேவ -பொல்கஸ்ஓவிட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

இறந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலைiயில், அவர் 5.06 அடி உயரம் கொண்டவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதிவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.