தென்கொரியாவில் 1.29 லட்சம் பேருக்கு கொரோனா.

தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது.

எனினும் தற்போது அங்கு பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 1,38,812 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று 1,29,411 பேருக்கு தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2,21,29,387 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.