வேலை செய்யுங்கள் அல்லது வீட்டுக்குப் போகலாம்! அரச ஊழியர்களுக்கு ரணில் இறுதி எச்சரிக்கை! (காணொளி)

எவருக்கும் வெறுமனே சாப்பிடக் கொடுக்க முடியாது எனவும், வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அநுராதபுரத்தில் தெரிவித்துள்ளார்.

நீங்கள் வேலை செய்வதாக இருந்தால் , வேலை செய்யலாம், முடியாவிட்டால் வீட்டிற்கு போகலாம் , எந்தவொரு அரச ஊழியர்களுக்கும் வெறுமனே சம்பளம் வழங்க தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

அனுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த நாட்டை நான் அபிவிருத்தி செய்யாவிட்டால் நானும் செல்ல வீட்டுக்கு செல்ல வேண்டி வரும். எனவே, முதலில் கிராமத்தில் இருந்து தொடங்குவோம்” என்று ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையுமாறு யாரையும் கூறவில்லை என்றும், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் தாமதமின்றி இணையுமாறு அனைவரையும் அழைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.