ரணிலின் வீடு தீப்பிடித்த போது நான் அங்கு இல்லை! – துலாஞ்சலி பிரேமதாச.

ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி , துலங்கலி பிரேமதாசவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் ஒரு இலங்கை பிரஜை, நான் என் பெற்றோரின் குழந்தை, என் கணவனின் மனைவி, என் குழந்தைகளின் தாய், என் சகோதரனின் சகோதரி என இருப்பதற்கு முன் நானாகவே இருக்கிறேன்.

இலங்கைப் பிரஜை என்ற வகையில் எனக்கும் அரசியலமைப்பின் கீழ் அனைவருக்கும் உள்ள அதே உரிமைகள் உள்ளன.

ஒரு சாதாரண குடிமகனாக, நாட்டின் எந்த சட்டத்தையும் மீறாமல், நாட்டின் சுதந்திரத்திற்காகவும், எனது உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவேன்.

நான் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று உங்களில் சிலர் நினைக்கலாம்.

நாடே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், நாட்டுப் பிரச்சினைகளை மறந்து நான் ஏன் வீட்டில் இருக்க வேண்டும்?அப்படியே நாம் அனைவரும் மௌனமாக இருந்தால் நாட்டின் கதி என்ன?

என்னால் மட்டும் நாட்டிற்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இலங்கை பிரஜைகளாகிய எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் அமைதியான போராட்டங்களில் பங்கேற்பது எவ்வாறு பிரச்சினையாக இருக்க முடியும், அது எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும்.

எனது பெயரையும் இமேஜையும் கெடுக்க முயலும் சிலர் தங்கள் இஷ்டத்திற்கு சாட்டப்படும் கீழ்த்தரமான அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் எனது குணாதிசயத்தையோ பிரேமதாசவின் பெயரையோ எதுவும் செய்ய முடியாது.

மேலும் அன்று நடந்த சம்பவங்கள் பற்றிய உண்மைகளை நான் யாருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் உண்மையைக் கூற எனக்கு உரிமை உள்ளது.

எனவே, அன்று நடந்த சம்பவத்தை கீழே குறிப்பிடுகிறேன்.

ஐந்தாவது பாதைக்கு முன்னால் உள்ள நடைபாதையில் நின்று பிரதமரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.அதற்கு சில நிமிடங்களுக்கு முன் நாங்கள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரால் கடுமையாக தாக்கப்பட்டோம்.

நான் மீண்டும் நடைபாதைக்குச் சென்று இளம் போராட்டக்காரர்களைப் பார்த்தேன், அப்போது ஒரு போலீஸ் அதிகாரி வந்து அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னார்.

ஆனால் இலங்கையின் பெரும்பான்மையான மக்களைப் போன்று நானும் பிரதமரை பதவி விலகச் சொல்லி அங்கு நிற்க எனக்கும் உரிமை உண்டு என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தேன்.

சிறிது நேரத்தில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நீர், கண்ணீர் புகை குண்டுகளை வீசி மிக ஆக்ரோஷமாக நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.அப்போது அவ்விடத்தில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் கலைந்து சென்று தர்ஸ்டன் கல்லூரியில் சில கணங்கள் பதுங்கியிருந்தேன்.

அப்போது, வீதியில் நின்று கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த நேரத்தில் நாங்கள் தர்ஸ்டன் கல்லூரிக்குள் இருந்ததால் இந்த நிகழ்வை எங்களால் சரியாக கவனிக்க முடியவில்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு, எட்டு மணியளவில், நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி வீடு திரும்பினோம்.

அதன் பிறகு நடந்ததைக் கேள்விப்பட்டோம்.

யாருடைய வீட்டையும் எரிப்பதும், யாருக்கும் தீங்கு விளைவிப்பதும் நான் உட்பட எந்த ஒரு நல்லறிவு கொண்டவனும் மன்னிக்காத செயல்.
பிரதமரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதைக் கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், திகைப்பும் அடைந்தேன், இதுபோன்ற கீழ்த்தரமான செயலை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்.

அனைத்து மதத்தினருடன் இணைந்து வாழ்வதே எனது நோக்கம்.

நம் நாட்டின் இன்றைய சாதாரண குடிமக்கள் வாழ்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் , மிக விரைவில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்.

அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு, உடை, மருந்து, பிள்ளைகளின் கல்வி, சுதந்திரமாகத் தொழில் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

முதலில் மக்கள் வாழ வேண்டும், மக்களை வாழ வைக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது, நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசாங்கம் எதற்கு பொறுப்பேற்க வேண்டும், மக்களுக்கு மிக விரைவில் நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம் ஆட்சியில் இருந்தும் பயனில்லை.எனவே தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

மேலும், எதிர்காலத்தில் ஆட்சியில் இருந்தாலும், மக்களின் பிரச்சினைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாவிட்டால், மக்களை ஒடுக்காமல் மக்கள் வீதிக்கு வரும் முன் அவர்களும் மரியாதையுடன் பதவி விலக வேண்டும்.

பல அரசியல் தலைவர்களும், கட்சிகளும் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எனது இமேஜை சேதப்படுத்தி தங்கள் இமேஜை வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது இரகசியமல்ல.

இருப்பினும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் பொய்யான செய்திகளை பரப்பி அந்த உண்மைகளை நம்பாமல், இதைப் பற்றி புத்திசாலித்தனமாக சிந்திக்கவும், விமர்சன ரீதியாகவும் சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பேசுபவர் என்ன சொன்னாலும், கேட்பவர் கவனமாகக் கேட்க வேண்டும்.

அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்!!!

துலாஞ்சலி ஜெயக்கொடி

Leave A Reply

Your email address will not be published.