அரகலய மாணவர்களின் தடுப்புக்கு கைச்சாத்திட்டால் அன்றைய தினம் இலங்கைக்கு இருண்ட நாளாகும்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவரை தடுத்து வைக்கும் உத்தரவில் கையொப்பமிட வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களுக்கான விசேட பிரதிநிதி மேரி லோலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அவர்களை தடுப்புக் PTI காவலில் வைக்க கையெழுத்திட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு கையொப்பமிட்டால் அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும். ”

மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மேரி லோலர் , ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.