Gota Go Home வெளிநாட்டு போராட்டக்காரர்களையும் துரத்தும் போலீசார்!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகளால் அர்ஜுன அமதோரு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் வசிக்கும் இவர், தனது உறவினர்களை பார்க்க இலங்கை வந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் ‘கோட்டா கோ ஹோம்’ பிரான்ஸ் போராட்டத்தை ஏற்பாடு செய்வதில் தலைமை தாங்கியோரில் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்துடன் இந்த நபர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.