இந்தியா வீட்டுக்கு! இறுதிப் போட்டியில் விளையாட இலங்கையும் பாகிஸ்தானும் முடிவு!

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் தோற்கடித்ததன் மூலம், இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தங்கள் இடங்களை ஒதுக்கிக்கொண்டன.

அதன்படி, இறுதிச் சுற்றில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் எஞ்சியிருந்தாலும், இன்றைய போட்டியின் முடிவால், இந்தியா ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் இந்தியா நாடு திரும்புவதற்கு தயாராகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.