இலங்கை, இந்தியர்கள் 10 பேர் 434 கிலோ கஞ்சாவுடன் கைது!

434 கிலோ கேரள கஞ்சாவுடன் இலங்கை மற்றும் இந்தியர்கள் தலா ஐவர் என 10 பேர் கற்பிட்டிக் கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சாவைக் கற்பிட்டியில் இறக்கிவிட்டுத் தப்பிச் செல்லும் நோக்கில் உட்புகுந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஐவர் இலங்கைப் படகில் கேரள கஞ்சாவை மாற்ற முற்பட்டபோது இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இந்தக் கேரள கஞ்சாவைக் கரைக்குக் கொண்டு வர முயன்ற இலங்கை மீனவர்கள் ஐவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 10 பேரும் சான்றுப் பொருட்களுடன் கற்பிட்டிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.