தென்ஆப்பிரிக்காவில் பள்ளி வேன்-லாரி நேருக்கு நேர் மோதல்: 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் பரிதாப சாவு.

தென்ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குவாசுலு-நடால் மாகாணத்தின் பொங்கோலா நகரில் தனியார் தொடக்க பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.

நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் முடிந்ததும் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வேனில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட 19 சிறுவர்கள், டிரைவர் மற்றும் உதவியாளர் என மொத்தம் 21 பேர் இருந்தனர். இந்த நிலையில் பொங்கோலா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் அதிக வேகத்தில் வந்த சரக்கு லாரி ஒன்று பள்ளி வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 19 சிறுவர்கள், டிரைவர் மற்றும் உதவியாளர் என 21 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.