பிரதமர் பதவி குறித்து மொட்டுக்குள் சர்ச்சை?

பிரதமர் பதவியை பகிர்வது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை புதிய பிரதமராக நியமிக்க வேண்டும் என ஒரு சாராரும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் வைத்திருக்க வேண்டும் என மற்றொரு சாராரும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளமையால் , பொதுஜன பெரமுனவின் இரு குழுக்களுக்கிடையில் பனிப்போர் ஒன்று ஏற்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே அந்த பதவியில் இருக்க வேண்டும் என்பதில் பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் பிடிவாதமாக இருப்பதாகவும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையிலான மற்றொரு குழு கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்துக்குள் நெருக்கடி நிலை உருவாகியுள்ள போதிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இதுவரையில் அவர் கருத்து எதையும் வழங்கவில்லை.

இந்த நிலையில், பொதுஜன பெரமுனவின் மிதவாத எம்.பி.க்கள் குழு ஒன்று விரைவில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்கவும், பிரதமர் பதவியை ஏற்பது அல்லது அரசியலுக்கு திரும்புவது குறித்து நாட்டுக்கு தெளிவான அறிவிப்பொன்றை வெளியிடுமாறு கேட்பதென்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.