ரேசன் கடைகளில் சோப்பு போன்றவை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது – அமைச்சர் எச்சரிக்கை

ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை பாமாயில், மண்ணெண்ணை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன் சோப்பு, உப்பு போன்ற மற்ற பொருட்களையும் வாங்க ஊழியர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபோன்ற பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, புதிய ரேசன் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.