சமந்தா பவருக்கு பின் அமெரிக்காவிலிருந்து மற்றுமொரு பலமான அதிகாரி இலங்கை வருகிறார்!

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் சின்டி மெக்கெய்ன் எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்திப்பதுடன், தூதுவர் மெக்கெய்ன் இலங்கையின் அமெரிக்காவிற்கான தூதுவர் ஜூலி சுங்குடன் சேர்ந்து, மத்திய மாகாணத்தில் உள்ள பள்ளிகள், விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சந்தித்து, அமெரிக்க நிதியுதவி பெறும் மனிதாபிமான உதவித் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் செயல்படுத்துபவர்களிடம் நேரடியாக விவரங்களைக் கேட்டறியவுள்ளதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.