கொழும்பு, பாலத்துரையில் உள்ள 50 வீடுகள் தீக்கிரை : உதவ ஜனாதிபதி உத்தரவு (Video)

இன்று (27) இரவு 8 மணியளவில் தொகொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ பகுதியில் உள்ள குடிசைகளில் தீ பரவியது.

தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, சுமார் 50 வீடுகள் தீயில் எரிந்துள்ளன.

எவ்வாறாயினும், இதுவரை உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தொட்டலங்கா மோதர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள கஜிமாவத்த பகுதியில் தொடர்ச்சியாக சுமார் 50 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவின் சுமார் 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தீ விபத்து சம்பவம் குறித்து அறிந்துகொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள், தீயணைக்குப் பிரிவினர், சுகாதார அதிகாரிகள், உள்ளிட்ட அனைத்து அரசாங்கத் தரப்பினரையும் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தேவைகளை இன்றிரவு முதலே பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக ஆரம்பித்துள்ளார்.

இன்று (27) இரவு 8 மணியளவில் தொட்டலங்க காஜிமா வத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 50 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

எவ்வாறாயினும், இதுவரை உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.