தீர்வுக்கான பேச்சு விரைவில் ஆரம்பம்! – பிரதமர் தினேஷ் அறிவிப்பு.

“தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு விரைவில் பேச்சை ஆரம்பிக்கும்” – என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைகள் தொடர ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று தெரிவித்த தினேஷ் குணவர்த்தன, குறுகிய காலத்துக்குள் இந்தப் பிரச்சினைகளுக்குள் உரிய தீர்வுகளைக் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய பிரச்சினைகள் நீடித்தால் இன, மத நல்லிணக்கம் ஏற்படாது. நாட்டில் ஏதோவொரு வகையில் இன ரீதியிலும், மத ரீதியிலும் கருத்து மோதல்கள் உருவாகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்திக் குளிர்காய சிலர் முற்படுகின்றனர்.

தீர்வு விடயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் விரைவில் பேச்சை ஆரம்பிக்கவுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.