ரணில் அரசு விரைவில் கவிழும்! – அடித்துக் கூறுகின்றார் மைத்திரி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் ஆயுள் விரைவில் முடிவடையபோகின்றது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அதன் ஆயுள் விரைவில் முடியப்போகின்றது. தேர்தல் ஒன்றின் ஊடாகவே ஆயுள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

தற்போதைய அரசுக்கு நிலையான பயணம் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதே வழியில் பயணித்தால் தேசிய உற்பத்தி முழுமையாக இல்லாமல் போகும். போராட்டம் வேறு வடிவில் வெடிக்கும். மாணவர்கள் கூட வீதிக்கு இறங்குவார்கள்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பேரவையில் அங்கம் வகிக்காது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.