வட மாகாண ஆண்களுக்கான மென்பத்தாட்ட துடுப்பாட்டத்தில் முல்லை. மாவட்ட அணி சம்பியன்!

வட மாகாண ஆண்களுக்கான மென்பத்தாட்ட துடுப்பாட்டத்தில் நேற்று(02) மன்னாரில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி 1ம் இடத்தை பெற்றுக் கொண்டது.

முல்லைத்தீவு மாவட்ட அணியானது கால் இறுதி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியை வெற்றி கொண்டு, அரையிறுதியில் மன்னார் மாவட்ட அணியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி, கிளிநொச்சி மாவட்டத்தை வெற்றி கொண்டு
1ம் இடத்தை தமதாக்கினர்.

இப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணியானது யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி என மூன்று மாவட்டங்களுடனும் போட்டியிட்டு 1ம் இடத்தை தமதாக்கினர்.

குறித்த மாவட்ட அணியில் விஸ்வமடு, ரெட்பானா, உடையார்கட்டு, தண்ணீருற்று, முள்ளியவளை ஆகிய பிரதேச வீரர்கள் இடம் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.