தேரேறி வந்து அருள் பாலித்த வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்., வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்ற பின்னர் சக்கரத்தாழ்வார் தேரேறி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாளை மாலை சமுத்திரத் தீர்த்தமும், நாளைமறுதினம் காலை கேணித் தீர்த்தமும் நடைபெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் பெருந் திருவிழா நிறைவுறும்.

Leave A Reply

Your email address will not be published.