கிண்ணம் வென்றது புத்தூர் வளர்மதி.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் அமரர்
சிவகுருநாதன் அவர்களின் ஞாபாகர்த்தமாக
நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் கடந்த 08-10-2022 இளவாலை. வாலிபத்திடலில் இடம்பெற்றது! இதில்
ஆவரங்கால் இந்து எதிர் புத்தூர் வளர்மதி அணிகள் மோதின!

5 சுற்றுக்களைக் கொண்ட இப்போட்டியின்
முதலாவது சுற்றினை வளர்மதி 25க்கு19 என்ற புள்ளிகணக்கில் தன்வசபடுத்த பதிலுக்கு
ஆவரங்கால் இந்து 2வது சுற்றை அதே புள்ளிகணக்கில் தன்வசபடுத்த ஆட்டம் விறுவிறுப்படைந்த்து!

தொடர்ந்தும் 3வது, மற்றும் 4வது சுற்றினை பெரும் போராட்டத்தின் மத்தியில் தன்வசபடுத்தி
கிண்ணம் வென்றது புத்தூர் வளர்மதி

Leave A Reply

Your email address will not be published.