மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பலி.

முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்புலப்பு பகுதியில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கிய 2வது நபரும் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்புலப்பு பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த முள்ளிவளையைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோரர்கள் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விபத்தில் சிக்கிய 2வது நபரும் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெற்ற குறித்த விபத்தில் முல்லைத்தீவிலிருந்து சிலாவத்தை நோக்கிப் பயணித்த முல்லைத்தீவு நீராவிடிப்பிட்டியைச் சேர்ந்த ஒன்று விட்ட சகோதரர்கள் இருவரே சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.