இது தேர்தலை நடத்துவதற்கான நேரம் அல்ல! – வஜிர கூறுகின்றார்.

“நாட்டில் எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலையும் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இது தேர்தலை நடத்துவதற்கான நேரம் அல்ல. தேர்தலுக்கு அழைப்பு விடுப்பவர்கள் நாட்டைச் சீர்குலைக்க விரும்புபவர்கள். தேசத்தைச் சீர்குலைக்க நினைக்கும் இந்தச் சக்திகள் விரைவில் ஓரங்கட்டப்படுவர்.

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 8 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாகக் குறைப்பதும், ஆட்சியின் அனைத்து அடுக்குகளிலும் உள்ள விருப்பு வாக்கு முறையை இல்லாதொழிப்பதும் அவசியம்.

விவேகமுள்ள எவரும் இதை எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.