அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு.

“அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும், பால்மா விலைக் குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.”

இவ்வாறு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதன்போது, சில அத்தியாவசியப் பொருட்களின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது என்று வர்த்தக அமைச்சர் கூறினார்.

அதற்கமைய, பருப்பு கிலோ ஒன்றின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும், வெள்ளைப் பச்சையரிசி கிலோ ஒன்றின் விலை 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும், சீனி கிலோ ஒன்றின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும், கோதுமை மா கிலோவொன்றின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது என்று வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பால்மா விலை குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்த விலை குறைப்பு தொடர்பான சந்தை நிலைமைகளை தொடர்பில் வர்த்தக அமைச்சர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக விளக்கமளிப்பார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.