சீமானைச் சந்தித்தார் சிறீதரன்! – ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் பேச்சு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, உலக அரங்கின் சமகால அரசியல் நகர்வுகள், அதிகூடிய சமூக, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், வாழ்வுரிமைக்காகப் போராடும் ஈழத்தமிழர்களின் எதிர்கால நலன் கருதி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான சந்திரசேகர், இளம் செயற்பாட்டாளர் மைக்கேல் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.