யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையானவர் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

புத்தூர் மேற்கு, மருதடியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்வியில் திறமையாகத் திகழ்ந்த இவர், உயர்தரத்துக்குத் தெரிவான பின்னர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலையில் இணைந்துள்ளார். அங்கு உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்.

அதன் பின்னர் வீட்டிலுள்ள பொருள்களைத் திருடுவது உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சீர்த்திருத்தப் பாடசாலையிலும் இளைஞர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவர் கடந்த ஒரு மாத காலமாக உயிர்கொல்லி ஹெரோய்னை நுகர முடியாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மாதாந்தம் ஒருவராவது இவ்வாறு உயிரிழக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனையிலிருந்து மீள்வதற்கு முயற்சிப்பவர்கள் உரிய மருத்துவ ஆலோசனையுடனேயே அதனை முன்னெடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.