குளத்தில் மூழ்கி இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு!

குளத்தில் நீராடச் சென்ற இராணுவச் சிப்பாய் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குருநாகல் – எகெட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிரிகம்பமுனுவ, பொல்கஸோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிப்பாய் பனாகொட இராணுவ முகாமிலிருந்து அநுராதபுரம் முகாமுக்கு மேலும் சில சிப்பாய்களுடன் சென்ற போது, அங்கிருந்த குளத்தில் நீராடிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எஹெட்டுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் எகெட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.