அடக்குமுறைக்கு எதிரான நாளைய போராட்டத்தில் சஜித் ! தாக்கினால் பார்த்துக் கொள்வோம்! (VIDEO)

நாளைய நடைபயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என சிலர் கூறுகின்றனர் இது முழுப் பொய் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒடுக்குமுறைக்கு எதிராக தனிமையில் போராடக் கூடாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தனிமைப்படுத்தப்பட்ட, குறுகிய நிகழ்ச்சி நிரல்களால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த அவர், அனைவரும் ஒன்றிணைவதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு , அடக்குமுறைக்கு எதிராக தமது கட்சி நூறு சதவீத ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

நாளை அமைதிப் பேரணி நடத்தப்படும் எனவும், அதனை அடக்குவதற்கு பாதுகாப்பு தரப்பினர் தயாராக இருந்தால் உடனடியாக தமது ஆயத்தங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும், அமைதிப் போராட்டத்திற்கு எவரேனும் இடையூறு விளைவித்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அமைதிப் பயணத்தை எதிர்ப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சக்கள் அடக்குமுறையின் பிதாக்கள் எனவும் தெரிவித்தார்.

சிறிதம்ம தேரர், வசந்த முதலிகே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மொட்டுவைச் சேர்ந்த ராஜபக்ச மற்றும் ஏனைய எம்.பி.க்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் , அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் இன்று (01) கைச்சாத்திடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.