எஸ்.பி. கடமை பொறுப்பேற்பு

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவராக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி. புஸ்பகுமார முன்னிலையில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.