உணவகம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.

சீனாவில் உணவகம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

ஷான்ஷி மாகாணத்தில் உள்ள லின்ஃபென் என்ற இடத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த உணவகத்தில் 80 வயது முதியவர் ஒருவரின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் உணவகத்தின் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 21 பெண்கள், 8 ஆண்கள் என 29 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. உணவகம் அனுமதி பெற்று கட்டப்பட்டதா என்று குறித்து ஷான்ஷி மாகாண அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.