பெரிய விபத்து தவிர்ப்பு: சாமர்த்தியமாக நிறுத்தப்பட்ட அதிவேக ரெயில் – பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்த யானைகள்!

திப்ருகர்,

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் நேற்று யானைக்கூட்டம் ஒன்று ரெயில் தண்டவாளத்தை கடந்ததை வனத்துறையினர் கவனித்து, அந்த வழியாக வந்த அதிவேக ரெயில் ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த ரெயில் தூரத்திலேயே நிறுத்தப்பட்டதால் யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்தன. முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த தகவலை தெரிவித்தார்.

யானைகள் ‘ செல்லும் ரெயில் வழித்தடங்களில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். யானை வழித்தடங்களில் தடைகளை ஏற்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட மறுநாள் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பரில் ரெயில்மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.