ரயில் விபத்தில் 6 பேர் படுகாயம்.

ரயில் விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள கடவையில் ஜீப் ஒன்றுடன் ரயில் மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.