கோட்டாவுக்கு எந்தவொரு நாடும் அடைக்கலம் வழங்கக்கூடாது! – தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் வலியுறுத்து.

“21ஆம் நூற்றாண்டில் மனித குலம் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் தமிழினத்தைக் கருவருத்தச் செயற்பாட்டை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மனித உரிமையை நேசிக்கும் எந்தவொரு நாடும் அடைக்கலம் வழங்கக்கூடாது.”

– இவ்வாறு தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ராஜபக்ச குடும்ப ஊழல்வாதிகளுக்குப் பின்னால் நின்று பிழைப்பு நடத்தியவர்கள் வடக்கு, கிழக்கில் பலர் உள்ளனர்.

இவ்வாறானவர்களைக் கண்டிக்கும் வகையில் எதிர்வரும் 17ஆம் திகதி காலை 09. 30 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் மாபெரும் கண்டன அமைதிவழிப் போராட்டத்தைத் தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்துள்ளது.

எனவே, வடக்கு, கிழக்கைச் சேர்ந்த எமது மக்கள், இளையோர்கள், பொது அமைப்புக்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.