சரஸ்வதி பிறீமியர் லீக்’ துடுப்பாட்டத் சுற்று தொடருக்கான வெற்றிக்கிண்ண அறிமுக விழா.

அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் அனுமதியுடன் நடாத்தும் ‘சரஸ்வதி பிறீமியர் லீக்’ துடுப்பாட்டத் தொடரின் முதலாவது பருவகாலத் தொடரிற்கான கிண்ணம், மற்றும் சீருடை அறிமுக நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்கு சரஸ்வதி சன சமூக நிலைய கலாசார நிலைய மண்டபத்தில் இடம் பெற்றது.

எதிர் வரும் 5 ஆம்,மற்றும் 6 ஆம் திகதிகளில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன் நிலையில் வெற்றிக்கிண்ணம், வீரர்களுக்கான சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

சரஸ்வதி சன சமூக நிலைய தலைவர் இ.ப மோகன் ஜித் தலைமையில் இடம் பெற்ற அறிமுக நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிருபா சாரதி பயிற்சிக் கல்லூரியின் அதிபர் கிருபாகரன், சரஸ்வதி சன சமூக நிலைய தலைவர் இ.ப மோகன் ஜித் ஆகியோர்’ இணைந்து வெற்றிக்கிண்ணத்தினை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆறு அணிகளை சேர்ந்த அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர். தொடரின் முதலாவது பருவகாலத்தில் சரஸ்வதி ரைனோஸ், சரஸ்வதி கில்லாடிகள் 100 ,சரஸ்வதி சலஞ்சர்ஸ ,சரஸ்வதி ஸ்பாட்டன்ஸ் சரஸ்வதி வோரியர்ஸ்,சரஸ்வதி லயன்ஸ் ஆகிய ஆறு அணிகளில் மொத்தம் தொண்ணூறு வீரர்கள் பங்குபற்றுவது குறிப்பிடதக்கது.


Leave A Reply

Your email address will not be published.