கில், புஜாரா சதம்: 2-வது இன்னிங்சில் இந்தியா 258 ரன்கள் எடுத்து டிக்ளேர்.

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

404 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் அணி 150 ரன்னில் சுருண்டது.

சிறப்பாக பந்துவீசிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் மற்றும் புஜாரா சதம் விளாசி அசத்தினர்.

இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக கேஎல் ராகுல் அறிவித்தார். இதனால் வங்காள தேச அணிக்கு 512 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

Leave A Reply

Your email address will not be published.