தினேஷ் ஷாப்டர் கொலை : நான் அவரை சந்திக்கவே இல்லை – பிரையன் தோமஸ்.

மர்மமான முறையில் மரணமடைந்த ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் நேற்று (15) தம்மை அழைக்கவில்லை என்றும், அவரிடமிருந்து ஒரு தொலைபேசி செய்தி மட்டுமே வந்ததாகவும், அதில் அவர் அவரை சந்திக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளதாக மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஷாஃப்டரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று செய்தி அனுப்பியதாகவும், நேற்று அவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான தனது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த தகவல்களும் கையடக்கத் தொலைபேசி செய்திகளும் உரிய விசாரணை குழுக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்படும் போது தான் தனது வீட்டிற்குள் இருந்ததாகவும், இது சிசிடிவி கேமரா ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரையன் தோமஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) மாலை வீட்டிலிருந்து புறப்படும் போது பிரையன் தோமஸை சந்திக்கப் போவதாக தினேஷ் ஷாப்டர் குறிப்பிட்டிருந்ததாகவும், இதன் காரணமாகவே இன்று பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, பிரையன் தாமஸ் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தினேஷ் ஷாப்டர் முறைப்பாடு செய்ததை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் பிரையன் தாமஸ் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டியதாயிற்று.

பொரளை மயானத்தில் வாகனத்தில் வைத்து தினேஷ் ஷாப்டர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தினேஷ் ஷாப்டரின் மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடனைத் திருப்பி பெறுவதற்காக கிடைத்த ஒரு தகவலை அடுத்து அதனை பெற தினேஷ் ஷாப்டர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதாக அவர் நேற்று போலீஸாரிடம் கூறியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.