நேர்மையா விளையாண்டவங்க வெளிய இருக்காங்க.! செம்ம கடுப்பில் கமல்.! (வீடியோ)

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து தானாக வெளியேறி விட்டார்.

தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா என மொத்தம் 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் ஆறு பேர் மட்டும் நாமினேஷனில் இருந்தார்கள். அதில் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வாரத்திற்க்கான வீக்லி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏஞ்சல் மற்றும் பேய் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நரகத்தில் இருக்கும் பேய்கள் எப்படியாவது சொர்கத்துக்கு செல்ல வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க். அப்படி சென்றால் அவர்களுக்கு நாமினேஷன் பிரீ சோனுக்கு செல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் மணிகண்டன், அமுதவாணன், ஏடிகே, ஜனனி என நால்வர் நாமினேஷன் பிரீ சோனுக்கு சென்றுள்ளனர். ஆனால் விக்ரமன் தான் முதலில் உள்ளே வந்து இருக்கிறார். ஜனனி மற்றும் தனலட்சுமி பொய் சொல்லி ஜனனியை வெற்றியாளராக அறிவித்து இருக்கின்றனர். அதனால் இந்த வாரமும் ஜனனியிடம் இருந்து நாமினேஷன் பிரீ சோன் பறிக்கப்பட்டு அது விக்ரமனிடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.