தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும்; கொலைகளை மறைக்கவா கொடுப்பனவு?” – முல்லைத்தீவில் உறவுகள் கோஷம்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது.

அந்த விசாரணைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது “தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும்”, “கொலைகளை மறைக்கவா கொடுப்பனவு?”, “சர்வதேச விசாரணையையே நாம் கோருகின்றோம்” உள்ளிட்ட பல கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.