டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் நடந்த சுவாரஸியம்- இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சின் இறுதி நாளுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது.இதனால் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான டாஸ்க்குகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதிக புள்ளிகளை பெற்றுள்ள அமுதவாணன் தான் இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் வெற்றியாளராக ஆக உள்ளார்.

இதன்மூலம் அவர் தான் முதல் ஆளாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பைனலுக்கு முன்னேற உள்ளார் என்பது உறுதியாகிவிட்டது.அதன்படி தற்போதைய நிலவரப்படி குறைவான வாக்குகளை பெற்றிருப்பதும் அமுதவாணன் தான். அவர் குறைவான வாக்குகளை பெற்றிருந்தாலும், அவர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்றுள்ளதன் காரணமாக இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட வாய்ப்பே இல்லை.

அதனால் இந்த வார எலிமினேஷனில் செம்ம டுவிஸ்ட் காத்திருக்கிறது. அமுதவாணனுக்கு அடுத்தபடியாக குறைவான வாக்குகளை பெற்றுள்ள போட்டியாளர் என்றால் அது ஷிவின் மற்றும் ரச்சிதா தான். இவர்கள் இருவருக்குமே குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளதால், இந்த வாரம் இவர்கள் இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளது.

அமுதவாணனை இந்த வாரம் எலிமினேட் செய்ய வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. ஒருசிலரோ அவர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கை நேர்மையாக விளையாடாமல் ஜெயித்து பைனல் போவதை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.