ஹபுஹின்னாவின் கடிதம் குப்பையில் : வைப்புத்தொகையை ஏற்கவும் – தேர்தல் ஆணையம்!

இன்று பிற்பகல், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வைப்புத்தொகையை திட்டமிட்டபடி தொடர்ந்து ஏற்குமாறு அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

அமைச்சரவை உத்தரவின் பிரகாரம் பிணையில் வைப்புத்தொகையை ஏற்க வேண்டாம் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவினால் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவினால் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம் சட்டவிரோதமானது எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.