இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை பேட்டிங் தேர்வு.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளார்.

இலங்கையில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மது சனங்கா, பதும் நிசங்காவுக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ அறிமுகமானார் மற்றும் லஹிரு குமார மீண்டும் அணிக்கு திரும்பினார். போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:- இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ். இலங்கை: நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, லாஹிரு குமாரா.

Leave A Reply

Your email address will not be published.