மாணவி வன்கொடுமை; பாடசாலை அதிபர் கைது.

பாடசாலை ஒன்றின் அதிபர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான அதிபர் மேலதிக விசாரணையின் பின்னர் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.