வவுனியா குடும்பத்தினரது சாவிற்கான காரணம் வெளியாகியுள்ளது

கடனைத் தாங்க முடியாமல் கணவன் மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை… 04 பேர் ஒரே கூரையின் கீழ் மரணம்…

தந்தை, தாய் மற்றும் சிறுவர்களான இரண்டு பிள்ளைகள் என நால்வர் அடங்கிய குடும்பம் இன்று காலை வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில் பிள்ளைகளும் தாயும் படுக்கையிலும், தந்தை தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

கணவர் அரச நிறுவனமொன்றில் கடமையாற்றியதாகவும், மனைவி வவுனியா மகாரம்பக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது – 42) வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது – 36), பிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது – 09), கௌ.கேசரா (வயது – 03) ஆகியோர் உறங்கிய படியும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

கணவர் அதிக தொகை பணத்தை கடனாக வாங்கி, கடனை கட்ட முடியாமல் குடும்பம் கடும் பொருளாதார சிக்கலில் இருந்தமையால், கையில் இருந்த தங்கப் பொருட்களை எல்லாம் விற்றும் கூட அவரால் கடனில் இருந்து விடுபட முடியவில்லை. கடன் தொல்லை தாங்க முடியாது , அவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போலீசாரது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் நடந்த உடனேயே அந்த வீட்டுக்கு ஏராளமானோர் செல்ல ஆரம்பித்துள்ளதால், அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தை, தாய், 2 பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பமே வீட்டில் சடலங்களாக மீட்பு!

Leave A Reply

Your email address will not be published.